Sunday, November 06, 2005

Dhonis Innings & 200 - 17

I wouldnt say that it was one of the greatest innings. But still, it was fascinating to its extent because of the number 183. I just got a chance to watch the re-telecast. As a batsman, he was in a free flow but not in full control. I felt that he could have easily reached the magical 200 mark. Unfortunately, the Srilankans failed to set a target with few more runs. The second reason is Rao. Though it is funny, I feel that he should have slowed down a bit giving a way for Dhoni. But Rao was right. Winning is important.It is not a place for personal records and for a good reason it is not so as those olden days of Indian Cricket where people like Kiran More and Prabhakar sacrifised a match just for the sake of few more runs and a hundred after their name. But after all, that was one great innings by the Jharkand wala after which most of us would have felt a surge in the adrenaline. Keep going guys.

Friday, December 31, 2004

எனக்கு பிடித்த சில பாடல்கள்


இந்த வாரம் முழுவதும் நான் அதிகமாய் கேட்ட பாடல்கள்:
பாடல்: when you say nothing at all
பாடியவர்: Ronan Keating
படம்/தொகுப்பு: Notting Hill
--------------
பாடல்: Powerless [Say what you want]
பாடியவர்: Nelly Furtado
படம்/தொகுப்பு: Folklore
--------------
பாடல்: கனா காணும் காலங்கள்
பாடியவர்: ஹரிக்ஷ் இராகவேந்தர், மதுமிதா, உஸ்தாத்சுல்தான்அலிகான்
இசை: யுவன் சங்கர் ராஜா
படம்/தொகுப்பு: 7ஜி ரெயின்போ காலனி [2004]
--------------
பாடல்: சந்திப்போமா
பாடியவர்: உன்னி மேனன், சின்மயி, அனுபமா இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
படம்/தொகுப்பு: எனக்கு 20 உனக்கு 18 [2003]
--------------
பாடல்: ஜொதெயெலி ஜொதெயெலி
பாடியவர்: எஸ்.பி.பி இசை: இளையராஜா
படம்/தொகுப்பு: கீதா [கன்னடம்]
--------------
பாடல்: கெஜ்ஜே மாத்தாடுத்தாவோ
பாடியவர்: யுவராஜ், மஞ்சுளா குருராஜ் இசை: ஜி.வி.அத்ரி
படம்/தொகுப்பு: சின்னடா கொலு [கன்னட கிராமிய இசை தொகுப்பு]
--------------
பாடல்: Yunhi Chala Chal
பாடியவர்: உதித் நாரயண், ஹரிஹரன், கைலாக்ஷ் கேர் இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
படம்/தொகுப்பு: ஸ்வதேஸ் [ஹிந்தி 2004]
--------------
பாடல்: பூங்காற்றிலே உன் சுவாசத்தை
பாடியவர்: உன்னி மேனன்,ஸ்வர்ணலதா இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
படம்/தொகுப்பு: உயிரே [1998]
--------------
பாடல்: அப்புடப்புடு அப்புடப்புடு
பாடியவர்: --- இசை: எம்.எம்.கீரவாணி
படம்/தொகுப்பு: க்ஷை [2004]
--------------
பாடல்: நல்லா நல்லானி கல்லா
பாடியவர்: --- இசை: எம்.எம்.கீரவாணி
படம்/தொகுப்பு: க்ஷை [2004]
--------------
பாடல்: ஜோங்கா ஹவா கி
பாடியவர்: ஹரிஹரன், கவிதா கிருஷ்ணமூர்த்தி இசை: இஸ்மாயில் தர்பார்
படம்/தொகுப்பு: ஹம் தில் தே சுகே சனம் [1999]
--------------

Friday, December 10, 2004

காதல் - ஒரு சில கதைகளும், ஒரே ஒரு விமர்சனமும்


" இடைவெளிகளை நிரப்பிடும்
காற்றின் விதிகளை மீறிய
காதலைச் சொல்லிக்கொடுத்தது - நீ "

இந்தக் கட்டுரைகளுக்கு/கதைகளுக்கு எந்தவிதமான முன்னுரையும் தர எவ்வித தகுதியும் இல்லாதவனாகிவிட்டதால் - இது எனக்கு சொல்லப்பட்ட, நானாக தெரிந்துக்கொண்ட, பார்த்த, அனுபவித்த பலரின் ஒருசில காதல் கதைகளின் தொகுப்பு. சுமார் முப்பது நாற்பது கதைகள் உள்ளன. இது யாவும் உண்மை கதைகள், நிஜ மனிதர்களையும் உணர்வுகளையும் சுமந்திருப்பன.
[இக்கதைகளை எதன் அடிப்படையிலும் வரிசைப்படுத்தி கொச்சைப்படுத்த விருப்பமில்லை;
இக்கதைகள் எந்த இனத்திற்கும் வக்காலத்து வாங்கா [ஆண்/பெண்] ]
கதை 1 -

" நீ
நீயாகவே இரு - நான்
நானாகவே இருக்கிறேன்.
ஏனென்றால்
எனக்கு, என்னைவிட
உன்னைத்தான் ரொம்ப பிடிக்கும் "

தென் தமிழக மாவட்ட கல்லூரிகளுக்கே உரித்தான கட்டுப்பாடுகளுடன் கூடிய பொறியியல் கல்லூரி அது. அதன் நீண்ட வராண்டாக்களை எல்லா கட்டுப்பாடுகளையும் மீறி மிதித்துச் சென்ற காதல்கள்தான் எத்தனை, எத்தனை. நம் கதையின் கதாபாத்திரங்கள் அனைவருக்குமே அது முதல் வருடம்.
கல்லூரியின் முதல் சினேகங்கள் எட்டிப்பார்க்கும் முதல் மாதம். நம் கதாநாயகனின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அவர் பெயர்.... கடம்பன் [என வைத்துக்கொள்ளலாம்]. ஒரு உயர் மத்திய தர குடும்ப வாரிசு. பார்க்க ரொம்ப சாதுவாய் இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போன்ற ஒரு முக ஜாடை. அமைதியான பேச்சு. அச்சம்,மடம்,நானம் எல்லாம் சரிவிகிதத்தில் கலந்துக்கொடுத்தார் போல ஒரு ஜாடை. இவையெல்லாம் கல்லூரியில் மட்டும்தான். விடுதியில் தெரியும் விபரீதம். ஆனால் யாருக்கும் தீங்கு இழைத்தலைப்பற்றிய சிந்தனையே இல்லாதவன்.
பொழுதுப்போகாத சனிக்கிழமை இரவுகளில், விடுதியில் விடிய விடிய பேசிக்கொண்டிருப்பதுதான் எங்களுக்கு அப்போதைய ஒரே பொழுதுப்போக்காக இருந்தது. அது இதுவென ஒரு வரைமுறையில்லாமல் எல்லாவற்றையும் பற்றி பேசுவோம். இப்படிக்கா ஒரு சனிக்கிழமையில் நம் பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நம் அருமை கதாநாயகன் கடம்பன், தம் திருவாய் மலர்ந்து தாம் காதல்வயப்பட்டிருப்பதைப்பற்றி உலறிவிட்டார். அச்சமயத்தில் சபையில் இருந்தது நான்கே நான்கு பேர்தாம். அந்த நான்கு பேரில் அடியேனும் ஒருவன். என் பாக்கியம்...
என் கல்லூரி வாழ்வின் முதல் காதல் கதை வெளிவந்த அந்த பொன்னான தருணத்தில் நானும் அங்கே இருந்தது என் பாக்கியம்தானே. "பொண்ணு யாருடா?"... இந்த கேள்விக்கு அவரிடமிருந்து விடை வாங்குவது எளிதென சின்ன தப்பு கணக்கு போட்டுவிட்டோம். சரியாக சுமார் ஒரு நாள் ஆனது. மறுநாள், ஞாயிறு முழுவதும் அவன் அறையிலேயே தவமிருந்து ஒரு வழியாய் பதிலை அவன் வாயிலிருந்து நெம்பி எடுத்து விட்டோம். பொண்ணு பேர் "கடம்பி". ஆனால் B செக்சன். நாங்கள் எல்லோரும் A செக்சன். நாங்க அந்த பொண்ணு பெயரைக் கேள்விப்பட்டது கூட இல்லை. அது யாரென்று தெரிந்துக் கொள்ள மறுநாள் வரை காத்திருக்க வேண்டும். வேறு வழியில்லை. அந்த செக்சன்காரன் யாரையாவது கூப்பிட்டு கேட்டால் அது நாங்களே போய் கல்லூரி நிர்வாகத்திடம், "எங்கள் நண்பன் இந்த பெண்ணின் மேல் காதல் வயப்பட்டுள்ளார்" என போட்டுக்கொடுப்பதற்கு சமானம். ஆகவே ஒரே நாள், ஒரே ஒரு இரவு காத்திருக்க முடிவு செய்தோம்...

















Tuesday, November 16, 2004

ஊர் பக்கம்....

ஆறு, ஏழு மாதங்களுக்கு பிறகு ஊருக்கு போவதால் ஏற்படும் எந்த எதிர்பார்ப்பும் என்னிடம் இல்லை. 1270 கிலோமீட்டர்கள் புகைவண்டியில் பயணம் செய்யப்போகும் ஒரு பயம் கலந்த எரிச்சல்... ஆனால், பெற்றோரையும், தம்பியையும் காணத்தான் இந்த பயணம் என்ற எண்ணம் சுகமாக இருந்ததென்னவோ உண்மை.
இம்முறை பயணம் சற்றே ஆச்சர்யம் கலந்ததாகத்தான் இருந்தது. அது புகைவண்டி நிலையத்துக்கு போகும் வழியில் பேருந்தில், எனக்கருகில் இருந்தவர்களின் உரையாடலில் ஆரம்பித்தது. எனக்கருகில் அமர்ந்திருந்த இருவரும், சென்னைமாநகரைச் சேர்ந்தவர்கள். அதில் ஒரு அன்பர் விட்ட சரடு, இன்னும் என் காதுகளில். அவர் வெகு சுவாரஸ்யமாக தன் கல்லூரி நாட்களின் லீலைகளை அடுக்கிக்கொண்டே இருந்தார். நடு நடுவே, திரைப்படங்களில் வருவது போன்ற 'punch dialogues' - "நான் என் பிரண்ட்ஸ்காக் எதுனாலும் பண்ணுவேனா", "பேரைச் சொன்னாலே" வகையறாக்கள். அவர்தம் நண்பர் வேறு இவரை ஏற்றிவிட்டுக்கொண்டே இருந்தார். ஒரு வழியாய் புகைவண்டி நிலையம் வந்ததும் பேருந்தில் இருந்து வேக வேகமாய் கீழே குதித்து தப்பித்தேன் என்றால் அதுதான் இல்லை. கூட்டமும் விதியும் எங்கள் மூவரையும் அடுத்தடுத்து தள்ளிக்கொண்டே சென்றது. கிடைத்த சந்தர்பத்தில் அவரிடம் தப்பித்து, கொஞ்ச தூரம் நடந்து, மற்றொரு வழியே, சென்னை செல்லும் வண்டி வரும் பிளாட்பாரத்தை அடைந்தேன். அங்கு ஆரம்பித்தது மற்றொரு ஆச்சர்யம். ..
நான் நெடு நாட்களாக காண வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த எனது உறவுக்காரர் ஒருவரைச் சந்தித்தேன். அவருடன் இரவு நெடு நேரம் பேசிக்கொண்டு வந்ததில் பயண தூரமும் நேரமும் சற்றே குறைந்துதான் போயிற்று. அவருக்கு சுமார் 32/33 வயது இருக்கலாம். [சரியாய் ஞாபகம் இல்லை] பொறியியல் படித்து முடித்து, வேலை செய்து, வெளிநாடு சென்று வந்து, பின் சுயமாய் தொழில் முனைந்து, அதன் பிறகு இப்போது, ஒரு நிறுவனத்தில் மேலாளர்களுக்கு மேலாளராய் உள்ளார். அவரின் 10 வருட அனுபவத்தை கேட்டதில் கிட்டத்தட்ட விடிந்து விட்டது. அதன் பிறகு, எனது படுக்கைக்கு சென்று சுமாராய் தூங்கி விழித்த போது, சென்னை மாநகர் வந்துவிட்டது. சென்னையிலும் அதன் சுற்று புறங்களிலும் நல்ல மழை பெய்ததற்கான, பெய்யப்போவதற்கான அறிகுறி ஆங்காங்கேயும், வானத்திலும் தென்பட்டது. வழக்கம்போல, ஆட்டோ ஓட்டுனரிடம் அதிகபடியாக சண்டைப்பிடிக்காமல், எனது தாய்மாமனாரின் வீடு போய்ச்சேர்ந்தேன். அங்கே ஒரு நாள் தங்கி, நண்பர்களையும், எனது அப்பாவின் சிநேகிதரையும் சந்தித்து, மறுநாள் கிளம்பி ஊர் போய்ச்சேர்ந்தால், போகும் வழியெல்லாம் மழை. மழை மகிழ்ச்சியளித்தது.
வீட்டைப்போல் சொர்க்கமுண்டா? அதுவும், தாயும் தந்தையும், சகோதரனும், 5 நிம்மதியான நாட்களும்... எனது, சகோதரிகள் இருவரையும் அதிசயமாய் ஒன்றாய் காண முடிந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி... மூத்த சகோதரியின் பெண் குழந்தை, வழக்கமான அமெரிக்க குழந்தையைப்போன்று, கொழுக்மொழுக்கென்று, புக்ஷ்டியாய் இருந்தது. குழந்தை பிறந்தபின் இப்போதுதான் இந்தியா வருகிறாள். 7 மாத குழந்தை... பிரிந்து வர மனமேயில்லை. இளைய சகோதரியின் மகன், , நாளேடுகளில் காணும் முருகன் படம் போலவே இருப்பான். அற்புதமாய் சிரிப்பான். அடுத்த வருடம் பள்ளிக்குச்செல்வான்... எந்த நாட்டில் என்று தெரியவில்லை. எந்த நாடாயிருந்தாலும், எந்த பள்ளியாயிருந்தாலும், பாவம் அவனுக்கு ஆசிரியராய் அமையவிருப்பவர்கள். பாடாய் படுத்தி எடுக்கப்போகிறான்.... இனி ஊரில் நடந்த நிகழ்வுகள்...

Thursday, November 04, 2004

என் கொள்கைகளுக்கு மாறாக, கொஞ்சம் அரசியல்....

1. அறிஞர் அண்ணா என்பவர் யார்?
2. அவர் ஒரு பெருந்தலைவர் ஆவதற்கு என்ன செய்தார்?
3. அவரை அறிஞர் என்று நாம் கொண்டாடுவது ஏன்?
4. தமிழக திராவிட கட்சிகள் அவரை வைத்து ஏன் இன்னும் அரசியல் புரிகிறார்கள்?
5. அண்ணாவை பற்றி[வாழ்க்கை வரலாறு அல்ல], திராவிட சார்பு நிலையற்ற யாராவது புத்தகம், கட்டுரை எதாவது எழுதியிருக்கிறார்களா?
6. திராவிட கட்சிகளின் வரலாறு என்ன?
7. புஷ் ஏன்&எப்படி ஜெயித்தார்?
8. அமெரிக்காவின் எதிர்காலம் என்ன?
9. புஷ்ஷின் அதிகார துஷ்பிரயோகம் ஒரு தொடர்கதையானால், உலக அரங்கில் அதன் பாதிப்புகள் என்னவாக இருக்கும்?
10. திராவிட - அமெரிக்க அரசியல்வாதிகள்... அடிப்படை ஒற்றுமைகளும், மக்களின் நிலைபாடும்...
அலுவலகத்திலிருந்து ஒரு வாரம் விடுப்பில் சொந்த ஊருக்கு போகிறேன். கிராமமாதலால், வீட்டில், dialup மட்டுமே சாத்தியம். dialup என்பது என்னை பொருத்தவரை யாருக்கும் நேரக்கூடாத கொடுமை. அதனால், இந்த ஒரு வாரத்தை நான் மேற்கண்ட 10 கேள்விகளுக்கு விடை தேட பயன்படுத்த போகிறேன். நிச்சயம், எதாவது உருப்படியான, ஆச்சர்யபடும்படியான தகவல் கிடைக்கும் என நினைக்கிறேன். திரும்ப வந்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன். எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
[தொடர்ச்சி...]
ஊர் சென்று திரும்பியாகிவிட்டது. அண்ணாவைப் பற்றி மறக்காமல் பலபேரிடம் கேட்டதில் கிடைத்த பதில் போதுமானதாயும், திருப்திதரும்படியும் இல்லாததால் அவரைப் பற்றி கண்ணதாசன் எழுதிய 'வனவாசம்' நூலைப் படித்து பார்த்து முதல் கட்டுரையையும், கிடைக்கும் மற்ற நூல்களைப் பொறுத்து இரண்டாம் கட்டுரையையும் எழுத வேண்டும்... பள்ளிகளில் அண்ணாவைப்பற்றி பாடம் இருந்தது. ஆனால் அது அவ்வளவு விரிவானதாக இல்லாததால் எனக்கு இந்த குழப்பம். அடிக்கடி வலை மேயும் நம்மில் பலருக்கு மைக்கேல் மூரையும் அவரின் வலைதளத்தையும் நன்கு தெரியுமாதலால் [www.michaelmoore.com] புஷ் ஒன்றும் புதியவரல்ல!!! என்னைப் பொறுத்த வரை அரசியல் ஒரு நுட்பமான, அறிவு ஜீவிகளின் கணிதம். ஆரம்பத்தில் தெளிவாக இருந்து பின் மெல்ல மெல்ல குழம்பி, பின் ஒரு நாளின் தீடீர் ஞானோதயத்தால் தெளிவு பெறும் ஒரு சாகச கலை. என்னைப் போன்றவர்களுக்கு சுட்டுப் போட்டாலும் வராது. இருந்தாலும் முயற்சி செய்ய ஆசை. முதலில் கண்ணதாசனின் புத்தகத்தைப் படித்துப் பார்க்கிறேன். அதன் பிறகு.....

Friday, October 29, 2004

வெடிகுண்டு தேசம்...

வியட்நாம் என்றொரு தேசம், அதில் அமெரிக்கா நடத்திய போர், இரு நாடுகளிலும் அதன் தாக்கம்... நவீன வரலாற்றின் மிகவும் கறை படிந்த பக்கங்கள். வியட்நாம் போரை இரண்டாம் உலகப்போரின் ஒரு தொடர்ச்சியாய்கூட கூறலாம். சைனாவின் ஆதிக்கத்தில் இருந்த வியட்நாமை மெல்ல மெல்ல 1860ல் ஆக்கிரமிக்க ஆரம்பித்த பிரான்சு 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதன் கட்டுக்குள் கொண்டுவர தொடங்கியது. இதன் நடுவே தன் பலத்தைக் காட்ட நினைத்த ஜப்பான், வியட்நாமை அடைய பிரான்சுடனான போராட்டத்தை தொடங்கி, 1945ல் ஒருவாறு, வியட்நாமியர்களை வைத்தே ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவியது. விடுவானா வீரன்? ஜப்பானியர்கள் கைப்பற்றிய பகுதிகளை மீண்டும் தன் கட்டுக்குள் கொண்டு வர பிரான்சு பெரும் பிராயத்தனப்பட்டது. ஆனால், 1954ல் பிரான்சு தோல்வியுற்று, நாட்டை விட்டு வெளியேறியது. அப்போது நாடு வ்டக்கு, தெற்கு என இரு பிரிவுகளாக இருந்தது. வட பகுதியை கம்யூனிஸ்டுகள் கவனித்து கொள்ள தென் பகுதியை, வியட்நாமின் அதிபராக சுய பிரகடனம் செய்து கொண்ட Ngo Dinh Diem தத்தெடுத்துக்கொண்ட கையோடு, தென் பகுதியை வியட்நாம் குடியரசு என பிரகடனபடுத்தினார். தென் வியட்நாமின் இந்த முக்கிய பிரகடனத்தினால் கவரப்பட்டு, ஏராளமான வடவியட்நாமியர்கள் தென் பகுதிக்கு குடிபெயர தொடங்கினர். வடபகுதியை ஆண்டு வந்த கம்யூனிஸ்டுகள் தெற்கில் இருந்த தமது தோழர்களின் உதவியோடு, 1955ல் இருந்து வட பகுதிக்காக போரிட ஆரம்பித்து, 1963ல், Ngo Dinh Diem ன் ஆட்சியை கவிழ்த்ததோடு அவரை கொல்லவும் செய்தனர்[மரணதண்டனை]. வடவியட்நாமையும், தென்வியட்நாமையும் இணைத்தாயிற்று, அதற்கு அடுத்ததாக, அந்த நாட்டில் மிச்சம் மீதியிருந்த, தன்னிச்சையாய் இயங்கிவந்த சில, பல குறுநிலங்களையும் கம்யூனிஸ்டுகள் கைப்பற்றியாயிற்று. இதில் அமெரிக்கா எங்கிருந்து வந்தது?....பிறகு....
[வியட்நாமில் அமெரிக்கா வீசிய குண்டுகளின் அளவு... சில மில்லியன் டண்கள். வீசப்பட்ட மொத்த குண்டுகளின் எண்ணிக்கை...[முடிந்தால் கற்பனை செய்து கொள்ளுங்கள்] தொடர்ச்சியாய், 9 ஆண்டுகளுக்கு, 8 நிமிடத்திற்கு ஒரு முறையென குண்டுகள் வீசினால் அது எத்தனை குண்டுகளோ, அத்தனை குண்டுகள். இன்னமும் வியட்நாமில் தினமும் செயலிழந்த, செயலிழக்காத என வகை வகையாய் குண்டுகள் கிடைத்தவண்ணம் உள்ளன. இது வெடிகுண்டு தேசம்தானே!!!]

Wednesday, October 27, 2004

வட இந்தியர்களின் எரிச்சலூட்டும் மனப்பான்மை...

நான் படித்தது, எங்கள் கிராமத்திலிருக்கும் ஒரு அரசு சார்ந்த தனியார் தமிழ் வழி பயிற்றுவிக்கும் ஒரு பள்ளியில். நான் தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்த வயதில் அரசு தொலைக்காட்சி மாத்திரமே இருந்தது. அதிலும் அவ்வளவாய் தமிழ் நிகழ்ச்சிகள் இல்லை. ஆண்டெனாவை கொஞ்சம் கொஞ்சமாய் திருப்பி இலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதுண்டு. இந்திய தொலைக்காட்ச்சியை அதிகமாய் ஆக்கிரமித்தது வந்தவை ஹிந்தி நிகழ்ச்சிகளே. விடுமுறை நாட்களில், பாடம் பயின்றது போக, வீட்டிலிருக்கும் வார இதழ்கள் படித்தது போக, பாட்டி வீட்டிற்கு சென்று பாட்டியிடம் இராமாயணம், மகாபாரத கதைகள், நீதி கதைகள் கேட்டது போக, நண்பர்களுடன் சென்று ஊர் பொது நூலகத்தில் அமர்ந்து பேசி பொழுது போக்கியது போக இருக்கும் ஏகப்பட்ட நேரத்தில், அம்மாவுடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதுண்டு. என் அம்மா ஒரு workaholic. டிவி பார்க்கும் நேரத்தில் கூட எதாவது பயனுள்ளதாய் செய்துக்கொண்டிருப்பார். என்ன என்ன நிகழ்ச்சிகள் என தெளிவாய் நினைவில்லை. ஆனால் பெரும்பான்மையானவை ஹிந்தி நிகழ்ச்சிகள் என்று மட்டும் தெளிவாய் தெரியும். அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து, பின் ஒரு சில நண்பர்களின் உதவியால் என ஒரு வழியாய் ஹிந்தி கற்றுக்கொண்டேன். இந்த கால கட்டத்தில் ஹிந்தி பாடல்களை ரசித்து கேட்க ஆரம்பித்தேன். ஹிந்தி பேசுவது கொஞ்சம் கெளரவமான, சற்றே அந்தஸ்த்து அதிகமான காரியம் என்றே நினைத்து வந்தேன். என் தாய் வழி மாமா ஒரு சிறந்த அறிவாளி. அவரிடம் எந்த விசயத்தைப்பற்றியும் பேசலாம். ஒரு நாள் அவரிடம் ஹிந்தி ஒரு musical language என்று விவாதித்திருக்கிறேன் [அவருக்கு ஹிந்தி மேல் நல்ல அபிப்பிராயம் இருந் ததில்லை]. காலப்போக்கில் படிப்பதற்காக, அதன்பின் வேலைக்காக என அவ்வப்போது இடம் பெயர்ந்ததில் பல வட நாட்டவரை சந்திக்கவும், பழகவும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு, தமிழ் என்ற ஒரு மொழியின் மேல் இருந்த ஒரு அக்கறை, இம்மொழியில் நான் கற்றவையாவும் பிற மொழிகளை, மொழியினரை, இனத்தவரை போற்றவே சொல்லிக்கொடுத்திருந்தன. அதையே நான் இப்பொழுதும் பின்பற்றி வருகின்றேன். ஆனால், ஹிந்தி பேசும் வட இந்தியர்கள் என்னுடய இந்த கொள்கையை, நிலப்பாட்டை உடைக்கும் வண்ணம் நடந்துக் கொள்வதில் எனக்கு சிறிது வருத்தமே. அப்படி என்னதான் பண்ணினார்கள் வடஇந்தியர்கள் என்பதை, இதன் தொடர்ச்சியை[சிறிதே நீண்டது] சிறிது அவகாசத்தில் எழுதுகிறேன்....